திங்கள், 9 ஆகஸ்ட், 2010

நாளை வரலாறு கூறட்டும் போ

ஏடா தமிழா இன்னும் உறங்குகிறாய்
தெற்கிருந்து கேட்கின்ற கதறல் உன் காதில் விழவில்லை
ஈழத்து சோதரியர் மானம் அழிவதுந்தன் மண்டைக்குள் ஏறவில்லை
இனமானம் இல்லாத பிணமாகிப் போனாயோ
நன்றி கெட்டு நக்கி திரிகின்ற நாயினும் கீழ் ஆனாயோ
புறநானுற்று வீரமெல்லாம் புனைகதையா
வெறும் சோற்றுக்கும் சில நூற்றுக்கும்
வாழ்வதா வாழ்க்கை
மொழி என்றால் 'விழி' என்று வாழ்ந்திருந்த
முன்னோனின் பிள்ளையா நீ
எச்சில் இலை நாய்கள் என ஆரியனின்
கண் சாடை கணித்து கை பார்த்து
அவன் கால் நக்கி திரிகின்றாய்
தன் இனம் காக்க மொழி காக்க
தன் இன்னுயிரை தந்த
எம் மறவர் இறந்தாலும் வாழ்கின்றார்
அனால் நீ
ச்சீ ....... நானென்ன சொல்ல
நாளை வரலாறு கூறட்டும் போ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக